Saturday, November 16, 2013

வா!

ன் அழகை என் கர்வத்தில்
கணக்கிட்டு கொள்ளும் தனித்துவமான என் அழகே
நீண்ட தூரம் நீ சென்று விட்ட போதும்
பேசாமல் நாட்கள் கடந்து போகின்ற போதும்
இன்னும் என் கண்கள் உன்னை காண்கிறதே
என் செவியில் உன் சிரிப்பின் இசை ஒலிக்கிறதே
இரவுகள் கலைந்தாலும்
கண்களில் கனவுகள் உரைகிரதே
யாரென்னை அழைத்த போதும் திரும்பவில்லை நான்
உன் பெயர் வரும் திசை திரும்ப மறக்கவில்லை
யாவரும் தேடும்படி
என்னை நான் துலைத்துவிட்டேன்
உன் கண்கள் என்னை துளைத்தவுடன்
மீண்டும் எய்துவிடதே உன் பார்வையை
இப்போதே இரண்டாக உணர்கிறேன் நான்
இன்னும் என்னை உடைக்காதே
உன்னை அள்ளி அணைக்கையில் ஒட்டிக்கொள்வேன்
வெட்க்க அணையை உடைத்துவிட்டு வா
நீல வானத்தில் மேகம் அள்ளி தெளிப்பேன்
இந்நாள் வரை உன் முகம் காட்டிய
அந்நிலவை கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்வேன்
நீண்ட நிலத்தில்
அடர்ந்த காடுகள் தேடி புற்கள் பறித்துப்பரப்பிவிடுவேன்
உன்னோடு கிடந்து அந்த வானத்தில் மேகம் கலைத்து விளையாடிட
வா!


No comments:

Post a Comment