Sunday, December 1, 2013

மகுடி

ரு முறை உண்டு
தினங்கள் இரண்டு சுருண்டு கிடந்தேன்
உறவுகள் எல்லாம்
மாதம் கிழித்து எறியும் சட்டையென இருந்தேன்
என் வட்டாரத்தில் யாரும் வரலாம்
யவரும் தங்கிட முடியாது
யாரையும் தாங்கிட நான் இல்லை என்றிருந்தேன்
ஒரு முறை பட்ட சலனத்தில்
சிக்கி இப்படி மாறினேனோ
இல்லை இப்பிறப்பே எனக்கு இப்படிதானோ என்றிருந்தேன்
மகுடியாய் வந்தாய்
சிரிக்க வைத்தாய்
என்னை நானே ரசித்தேன்
என் கனவுகளை உணவாய் உண்டாய்
பாவம் ஏதும் பார்க்காதவனுக்கு
பயம் தொற்றிக்கொள்கிறது
என் இருளினை எரித்து
காணாத வெளிச்சம் தந்தாய்
காயத்திற்கு மருந்து தேடாதவனை
உன்னோடு பேச காரணம் தேட வைத்தாய்
இதுவரை தனியாய் இரவும் பகலும் கடந்தவன்
இந்த மகுடிக்கு
ஒவ்வொரு நொடிக்கும் ஏங்கி
உற்றத்தோழனாய் இருந்த தனிமைக்கு பயந்தவனானேன்!



No comments:

Post a Comment