Friday, August 8, 2014

தீண்டத் தொலைந்தேன்!

தீண்டின அடுப்புமேல வெச்ச பாலா பொங்குது எம்மனசு
நீ போன அப்பறம் தீஞ்சு போன வாசம் உன் நாசி எட்டியிருக்காது
நெடுந்தொலவு நானு கடக்கையில்
உன் நினப்புல தான் தொலச்சேன்
தொலைச்சது ஏதுன்னு தெரியல தேடிப்பார்க்க
போன இடம் போன பின்ன தெரிஞ்சது
வந்து சேர வேண்டிய இடத்ததா நானு தொலைச்சது
நீ உருட்டு அந்த கருவிழியில தானே என் பாதை நீளுது
சோகமோ இல்ல சிரிப்போ
எதுவோ ரகசியமா வெச்சா கூட
ஒடச்சு எட்டி பார்க்கற..
காரணம் கேட்டு சிரிக்கற
அப்புறம் காணாம போய்டற
எல்லோரு சுத்தி இருந்து
யாரும் இல்லாத இந்த பௌர்ணமி நிலவு கிட்ட நானு புலம்பி தவிக்கறே..
என் புலம்பல் கேட்டு கேட்டு அதுவும் இப்போ தேயுது!



No comments:

Post a Comment