Wednesday, August 20, 2014

மௌனம் களையவிடு

ல்லா உறவுக்கும் பெயர் யார் சொல்ல
என் சிந்தை திருடும் உறவு இது
நான் எப்போது உன்னிடம் சொல்ல
கல்லுக்கடியில் காயாத ஈரத்தில்
துயிலும் சிறு வண்டு போல
உன்னோடு பேசிய
மங்காத நினைவுகளோடு பேசி பேசி
தினம் தினம் நான்
நீ இல்லாத நொடிகளை கொல்கிறேன்
நித்தம் யாவருடனும்
நான் பேசுவதே
உன்னை பற்றி என் சித்தம் குளிர
ஏதும் சொல்வார் என்றே
மறுமுறை பார்கையில்
உதட்டை சுளிக்காதே
காதோரம் சுருண்ட முடியை ஒதுக்காதே
நான் சொல்ல வந்ததை சொல்ல விடு!

No comments:

Post a Comment