Thursday, March 22, 2012

நான் கேட்பதெல்லாம்

ங்களிடம் புது சட்டை கேட்கவில்லை
கிழிந்த என் சட்டையை தைக்க கற்றுக்கொடுங்கள் என கேட்டு நிற்கிறேன்
உங்கள் கரம் பிடித்து நடக்க வேண்டாம்
என் பாதையை விட்டு நீங்கள் விலகி நடத்தால் போதும் என்கிறேன்
உங்கள் அறிவுரைகளை நான் கேட்பதில்லை
என் அறிவு பசிக்கு தீனி கேட்கிறேன்
உங்களின் உபதேசம் தேவையில்லை
கலந்துரையாடி அறிவு பெற எண்ணுகிறேன்
தோள் கொடுத்து தூக்கிவிட வேண்டாம்
என் கால்களை இடராது இருங்கள்
நாங்கள் வளர்ந்து கொள்வோம்
எங்கள் எண்ணங்களை கொல்லாது இருந்தால் போதும்
உங்கள் ரசனைக்கு என்னை தீனியாக்காதீர்கள்
எனக்கென்று ரசனைகள் உண்டு, மதிப்பு கொடுங்கள் போதும்
உங்கள் கனவுகளுக்கு என்னை செயலாக்கம் செய்யாதீர்கள்
நீங்கள் இடறிய பாதையில் என் பயணத்தை தடுக்காதீர்கள்
தானாய் இடறி விழுந்தால் நானாய் எழ கற்றுக்கொள்வேன்

என்னை விட்டு விடுங்கள்!



No comments:

Post a Comment