Sunday, November 22, 2015

மழைத்துளி

ஒத்தத் துளியா மொத்தமா நினைசுடும்
கொட்டி தீர்த்த மழையா தொடாத இடமெல்லா நெளிஞ்சே போறே
உடுத்தின துணியா இன்னும் இருக்கமா என் மேல இருக்கே
உடம்பெல்லா ஊறி போன பின்னு
இன்னு உள்ளே சூடவே இருக்கேன்
நேரம் என்னனு ரெண்டு பேரும் கேட்கல
பொழியற மழை நேரங்காலமா பார்க்கும்
ஓடுற வெள்ளம் காடும் மலைய பார்த்தா நிக்கும்
கண்ணோட கண்ண வெச்சுகிட்டு
கையோடு கை வெச்சு அழுத்தி
காதோட மூச்சு காத்து அடிக்க சொன்னது
அடிவயிதுல எதிரொலிக்குது!

Saturday, September 19, 2015

இன்னு என்ன சொல்ல..

ந்த நெத்தியில நீ தீட்டும் பொட்டுக்குள்ள
நீண்டு கிடக்குறேன்.. எழுந்து தான் நீட்டி படுக்கறேன்..
திட்டு உன் கோவத்துல தீ மூட்டி குளிக்கறேன்..
உன் நினைப்பு சத்தியம்தானு காட்ட கருகி கிடக்கிறேன்..
காதோரமா சுருட்டி வைக்கும் அந்த கேசம் போதுமே,
நான் தூங்க அந்த நீண்ட சடை கூட வேண்டாமே..
கண்ண குத்துமுன்னா சாமிக்கு பொங்க வெச்சேன்,
நீ வந்து நின்னா போதுமுன்னு தானே
கோவில் வாசலிலே குத்தவெச்சேன்..
இன்னு சும்மாவே சுழட்டி பார்க்காதே,
அப்போ பார்த்த பார்வைக்கே வீடு தெரு மறந்து நிக்குறேன்..
இன்னு எங்கே போறே நானே இங்கே என்னை விதைச்சு வைச்சிருக்கையிலே
வாய துறந்து சொல்ல வாக்கு ஒன்னுமில்ல
நீ என்னை கடக்கு முன்னமே சிணுங்கி எனக்கு சொல்லும்
உன் வலவிக்கு தெரியும் நீ கேளு அதுவே சொல்லும்!

Monday, June 29, 2015

அன்னையவள் சொன்னது


ண்டென்று உளமார உணர்ந்துவிடின்
அதெதுவென ஆயிரம் ஆராய்தலென்ன
ஊராருக்கு உளமார உணர்த்த
ஊனில்லை அத்தெனதுமில்லை உனதுமில்லைவேறென்ன
வெள்ளமது வேகுண்டு வேகமெடுக்க
ஊரென்ன உழவனேன்ன
ஏரேன்ன ஏரிளுக்கும் எருதென்ன
வேந்தனென்ன வேட்டையாடும் வேங்கைதான்னென்ன
புவியனைத்தும் புரட்டி புரண்டோட
மீனதுவும் குஞ்சும் எதிர்த்து ஏகாந்தமாய்
நீந்தும் - நிர்காமல் நிலமது
புரளும் பொழுது – அது ஏனோ
மீனது உணர்ந்தது நீரது மட்டுமே
நீக்கமற தன்னை ரட்சிகுமென்று...
சாரதா அன்னையவள் தன் பிள்ளைக்கு சொன்னது தானே!

Friday, May 8, 2015

மௌனமான நேரம்

நான் பேசி ஒரு நாள் முடியபோகிறது.

யாரோடு பேசி?

யவரோடும்.

அலுவலகத்தில் நான் பார்த்து கொண்டிருந்த வேலையை வேறு இடத்துக்கு மாத்தம் செய்கின்றனர். என்னோடு சேர்த்து குறைந்தது ஒரு நூறு பேருக்கு இனி மூன்று மாதம் இருக்கும் நிறுவனதிலேயே வேலை தேடும் வேலை. ஒரு வேலை இந்த கால கட்டத்திற்குள் வேலை கிடைக்கவில்லை எனில் அடுத்த மூன்று மாதம் வெளியில் வேறு இடம் தேட வேண்டும்.

இந்த சோகத்தில் ஏதும் யாரோடும் பேசாமல் கழிகிறதோ நாட்கள்?

இல்லை, இதுவரை சுமார் இரண்டு ஆண்டு காலம் தனியாக தான் வசிக்கிறேன். தனிமை, நல்ல பரிச்சியமான வார்த்தையாகவே இருந்தது. கடந்த இருபத்தி எட்டு ஆண்டு வாழ்கையில் இன்றும் தோள் உரசி பேசும் தோழன் ஒருவன் மட்டுமே உடன் நடந்து வருகிறான். அவனுக்கு கல்யாணம் நிச்சியமாகிவிட்டது. இனி தோனியவுடன் அழைக்கும் ஒரு எண் ஒரே அலைபேசி எண் இனி சற்று யோசித்து தான் அழைக்க வேண்டும். எழுந்தவுடன் அவன் வீட்டு கதவை நானே திறந்து படுத்திருக்கும் அவனை எழுப்பி இருக்கிறேன். இனி கதவுகள் திறந்திருந்தாலும் தட்டி பதில் வந்த பிறகு தான் உள் நுழைய வேண்டும்.

தனிமை சிரிக்கிறது...

இது தான் இப்போதையே மௌன விரதத்திற்கு காரணமா?

இல்லை, கடந்த வெள்ளி அன்று நடந்த விபத்து. சிறு விபத்து தான், காலில் சின்ன சிராய்ப்பு, சனியும் ஞாயிரும் வெகு வேலை (தள்ளி போட்டிருக்கலாம், இருந்தும்) சற்று அமரவில்லை. இதனால் அடி பட்ட இடம் வீக்கம் கண்டது. இப்போது ஒரு வாரம் மட்டம்.


வேலை இல்லை என சொன்னவரிடத்து என்ன பெரிய வேலை. நேற்று வெளியே சென்று உண்ண பொருள் அனைத்தும் வாங்கி அடுக்கியாயிற்று யாரோடு பேச என்ன இருக்கிறது. காலை நீட்டி (மருத்துவர் சொன்னார் தொங்க விட்டு உட்கார கூடாதென்று) தெமே என கடந்தது மௌனமான நாள்.

Sunday, April 26, 2015

உன் விருப்பம் போல் ..

னக்காக எதையும் உதறி விட்டு
வந்தவள் அல்லவே நீ..
தான் கொண்ட ஆசைகளை
துடைத்தவளில்லை நீ..
நான் இறுக்கும் போது
வடியும் வியர்வையிலும்
தன் விருப்பும் வெறுப்பும்
அழியாமல் என்னை அனைத்தவள்..
நான் பதித்த எச்சி துடைக்கும் போதும்
உன் வண்ணம் அழியா வண்ணம் துடைத்தவளன்றோ..
பசியில் நான் பற்கள் பதித்த போது
வளர்த்து வைத்திருந்த நகத்தால்
என் புறத்தை கீரியவள்..
நின்னையா தேடினேன்
நீ விரல் கோர்த்த பின்னரே
தேடலின் உன்னதம் உணர்தேன்
உன் மனம் நீ கொண்ட பாதை
என் விரல் விட்டு நடந்தாய்..
சின்னஞ்சிறு ரகியமா நீ
இனி எல்லாமுமாய் – உன்னையும்
செரிக்கும் ஒருத்தி மடிசாய காத்திருக்கிறேன்!

Sunday, March 22, 2015

யாதெனக் கொள்வேன்

கொண்டது யாவும் – யாரும்
கொள் கொள் என தந்தது இல்லை
தா தா என யாசித்து பெற்றதும் இல்லை
கேட்டு பெற வரமொன்றும் இல்லை
இது வாழ்கை!
துச்சாதனன் என துகில் உரிய முற்படும் நேரம்
மறு முனையில் கண்ணன் என்றே வந்து துகில் தருவேன்
இரணியன் என்று ஆர்பரிக்கும் பொருட்டு
பொறுக்காமல் தூண் உடைத்து நரசிமம் பூண்டு
என் அகந்தையை நானே கீறி உருவி உண்டு செரிப்பேன்
தன்னை தானே கொன்று உண்ணும்
நான் என்னை யாதெனக் கொள்வேன்?
நண்பன் அவன் பின் நான் அமர்ந்து
சிரித்து நீண்ட பாதையில் மகிழ்ந்து – உந்தி
வந்த ஊர்தி முன் சென்றதன் பின் மோத
நீத்தான் நண்பன், மீண்டு வந்தேன் நான்
எனக்கு உயிர் தர அவன் முன் அமர்ந்து சென்றானோ
அவனை கொல்ல நான் பின் அமர்ந்து எழுந்து வந்தேனோ
யாதெனக் கொள்வேன்?
சொல்லாதீர் பாவம் வந்து சேரும்
உமக்கு!

Sunday, March 15, 2015

உம்மூச்சுக் காத்து

வாழ்க்கை தரவனில்ல கடவுள்
வாழ கத்துத்தரவன் தான் கடவுள்
வாழ்க்கை எவனு
ஒரு நிமிச சந்தோசத்துக்கு தந்துட்டு போய்டலா
வெறு இருட்டுல...
எந்த கத்திரிக்காய்க்கோ இல்ல வெறு காமதுக்கோ
வாழ்க்கை தர முடியு..
பொறந்தது பொட்ட புள்ளைனு
பார்க்க வராதவன்
வளர வளர பக்கத்து வீட்டுக்கார.. எதுத்த வீட்டுக்கார
கூடவே வராத சொந்தக்காரனுக்கு பயந்து போய்
அத வழத்து கட்டிக் கொடுக்கும் போது மட்டு கண்ணீர் விடறவன் இல்ல..
வாழ கத்துத் தர உன் கூட விழுந்து
நீ அழும் போது அழுது..
அழ வெச்சவ கழுத்த எப்டி அறுக்கனுன்னு
கூடவே இருந்து கத்து எவன் தரானோ
அவன்தா சாமி
கடவுள்... உம்மூச்சுக் காத்து எல்லா..