Sunday, December 25, 2011

சுயநலம்


பேருந்தில் நின்றிருந்த அம்மாவுக்கு
எழுந்து இருக்கை தருகிறேன்!
சாலையில் கால் இடறி
விழுந்த அம்மாவுக்கு கை கொடுத்து தூக்கி விடுகிறேன்,
அவர் பால் பொருட்களை பொறுக்கி தருகிறேன்!
வேகமாய் செல்லும் போதும் -
யாரும் வழி கேட்டல் நின்று பதில் சொல்கிறேன்!
கண் பார்க்க முடியாது -
வரும் பேருந்து எண் என்ன வென்று கேட்கும் அம்மாவுக்கு
நான் கடுப்பில் இருந்த போதும் நிதானமாய் பார்த்து சொல்கிறேன்!
எங்கோ நான் இல்லாது
தனியாய் பேருந்தில் போகும்,
தினம் சாலையை கடக்கும்
என் அம்மாவுக்கு யாரேனும்
இது போல் உதவி செய்வர் என்ற சுயநலத்தோடு!

-- சித்ரன்




2 comments:

  1. Really good one!! ஆனால் இத்தகைய சுயநலத்தில் யாருக்கும் எந்த பாதகமும் இல்லையே... அதுவே நல்லதுதான்!!

    ReplyDelete
  2. இது சுயநலமாக இருந்தாலும் பிறர் நலம் காக்கிறது.. தொடரு உன் சுயநலத்தை... பாராட்டுக்கள்
    ஆனால் நீ கார் ல தான ஆபீஸ்க்கு வர (:-)

    ReplyDelete