Saturday, January 28, 2012

என்னைத் தடுக்கும் நாள்!

ழுவது கோழைத்தனம் என்றவன் அறிஞன்..
துடைத்து விட கைகள் இருக்கும்போது
அழுவது கூட சுகம் தான் என்றவன் கவிஞன்
அந்த கைகள் இல்லாமல் போனதால் தான் அழுகிறேன் நான்..!
தனிமை எனக்குப் பிடித்த நண்பன் தான்,
அவனை பல முறை பலரிடம் இருந்து பிடித்து இழுத்து வந்திருக்கிறேன்..
இன்று அவனை என்னிடமே தேடுகிறேன்..!
என் உடல் கூட சுமை என ஆகிறது
நான்கு பேர் தூக்கிச் சென்றால் தேவலை என்றிருக்கிறது..!
அழுது அலுத்துவிட்டேன்
கண்ணீர் வரத்து குறையவில்லை..!
இதோ சிரித்துவிடுகிறேன் என்றே
என்னை நானே ஏமாற்றி நாட்களை கடத்துகிறேன்..!
எவரிடமும் புலம்ப முடியாது,
எனக்கும் அது பிடிக்காது..!
அவளால் சிரிக்க முடிகிறது
என்னால் ஏனோ முடியவில்லை..
அவளால் நடிக்கவாவது முடிகிறது
என்னால் மறந்தும் சிரிக்க முடியவில்லை..!
எங்கெங்கோ வலிகளை உணர்கிறேன்
வாழ்க்கை நெடும் பயணமாக தெரிகிறது
தனியாய் பயணிக்கவே பயம் வந்து பற்றிக்கொள்கிறது..!
என்னுடன் தான் வருவேன் என்றாள்
இப்போது என்னுடன் நடக்க மறுக்கிறாள்
ஏதேதோ சொல்கிறாள்
அந்த ஒரு நாள் வாழ்கையே போதும் என்கிறாள்
அந்த ஒரு நாள் வாழ்க்கை தான்
மீத நாட்களை நான் கடக்க என்னை தடுக்கிறது..!