Sunday, January 29, 2012

இன்றே செலவு செய்!

நேற்று இறந்தவன்
இன்று வருவதில்லை,
வெட்டியாய் செலவாகும் இன்று
அவனுக்காக அழுவதில்!
நாளை என்பது எவனுக்கோ எழுதப்பட்டது
இன்று என்பது மட்டுமே  நம்மோடு
நமக்காக நடந்து வருவது!
ஒரு நொடி பயத்தில் கொலையும் செய்யலாம்
துணிச்சல் இருந்தால் மட்டுமே வாழ முடியும்
இறகில்லா விட்டில் பூச்சிக்கு
நெருப்பில் கூட மோட்சமில்லை!
மரணம் என்பது எப்படியும் வரலாம் ஆனால்
வாழ்வு வரைமுறைக்கு உட்பட்டது,
முறைகளும் இன்று வாழ வழி செயும்மாறு நாம் வரைதல் நன்று!
மரணமும் முடிவல்ல,
காதலில் தோற்பது
கவிதை எழுதுவதற்காக அல்ல
நேற்றைய செலவுகள் எல்லாம் இன்று வரவாவதில்லை
மிஞ்சியது எல்லாம் வரவு என்று கொள்வதில் தவறில்லை!
யாருடைய வெற்றியையும் யாராலும் கணிக்க முடியாது
ஜோதிடமும் ஒரு நொடி கணக்கு தான்
தவறுகளுக்குச் சாத்தியம் உண்டு!
கண்ணீர் யார் தாகத்தையும் தீர்க்காது
வருந்தும் நேரம் எல்லாம் வாழ்ந்த நாளில் சேராது
வானம் எல்லை என்றால்
நிலவில் நீர் ஆராய்ச்சி நடக்காது!
தொற்றவனுக்கு வெற்றி அடுத்த குறி
வென்றவனுக்கு அடுத்த தேடுதல் வெற்றியை தக்க வைக்கும் வழி
வெற்றியோ தோல்வியோ இன்றே செலவிட்டு விடு..
செலவுகள் போக மிச்சம் இருப்பதுதான்
லாபம், நிகர லாபம்!




1 comment:

  1. முற்றிலும் அழகிய & புதிய சிந்தனை...

    வானம் எல்லை என்றால் –
    நிலவில் நீர் ஆராய்ச்சி நடக்காது!

    Excellent!!

    ReplyDelete