Saturday, March 3, 2012

கர்மம்

ரணம் வருதல் யாரும் அறிவதும் இல்லை,
போபவன் அறியாவண்ணம் அது வந்து கடந்து போவதும் இல்லை
மூச்சை விட்டபின் யாது நிகழ்வென்று அறியா போது
அதை சாபம் என்று கூறுதல் பகுத்தறிவில்லை!
போகின்ற காலம் நெருங்கும் போது 
யாவையில் இருந்தும் விலகி வாழ்வது நன்று
காலன் அவன் இழுக்கும் தருணம் 
அங்கத்தில் உயிர் சிக்கிட சிதைந்திட கூடும்!
நம் தாகம் தீர்க்க செய்த செயல் தந்த பலன்கள் யாவைகும் 
வழி செய்து தருதல் கடன் என்று ஆகும்.
இந்த கடனும் கர்மமென்றாகும்..!
நம் வழி பயணம் துடங்க துணை ஒன்று தேடுதல்
இணை என்று கொண்ட பின் 
இணங்கி நடத்தல் முறையென்று கொள்க!
இந்த முறையும் கர்மமென்றாகும்..!
மனம் கொண்டதில் சென்று
தொழில் செய்து பணம் பார்த்தல்..
கற்றது கொண்டு செயல் செய்து வாழ்தல்..
பதின் காலம் எல்லாம் கலைகள் செய்தல்..
நட்பு பாராட்டி சிரித்து அழுது
அடித்து சேர்ந்து ஒழுகுதல்
தாயும் தந்தையையும் மதித்து நடத்தல் கடமை என்னும் கர்மம்!
வெளிவரும் வழி தடங்கள் இன்றி இருத்தலும்
தண்ணீர் குடத்தில் மிதக்கும் தருணம் வளரும் யாவையும்
குடம் நோக்கியே பயணம் முதல் தொடங்கும்  கர்மம்
எங்கிருந்து ஒட்டி வருகிறது என்று அறிந்து யாது செய்ய?

இனி செய்யும் கர்மம் ஏதோ பார்த்து செய்க..



No comments:

Post a Comment