Monday, March 19, 2012

நீ கனவல்ல

ன் கரம் பிடித்து ஆரம்பித்த கடலில்
இன்று நான் மட்டும் தன்னந்தனியாக
நால் கரைகளும் இருளானதே
என் கண்கள் ஏதும் காண மறுக்கிறதே
ஆழம் போய் முத்தெடுத்து 
ஒளியில் உன் முகம் கண்டேன் வழிநெடுகில்
உன் மதி முகம் என் மதி மயக்கி நான் விழவில்லை
நிகழ்திடக் கூடும் என எதிர்பார்க்கும் வேளைக்கும்
நடந்து விட்டதை உணரும் தருணத்திற்கும்
இடையில் நாம் விழுந்து கிடந்ததை உணர்தோம்
மற்ற உணர்வுகள் எலும்பும் முன்
நீ எழுந்து சென்றது தெரியாமல் இன்றும் அதே உணர்வோடு  நான்
மதியில் உன் முகம் கண்டு சிரிக்கிறேன் மூழ்குவது அறிந்தும்
நீ என்னோடு இருப்பது கனவல்ல

கனவுகள் தான் என் வாழ்க்கை!