Sunday, September 16, 2012

மீண்டும் கண்டுனர்ந்தேன்!

ந்தி கடந்து வந்த  இருள்
அடிவானத்தில் மின்னல்
காலின் கீழ் கடல் அலை
தலை எல்லாம் மழை தூறல்
அங்கு கனம் கூடாது என
என் காதுமடல் கண் மூக்கு வழி
வழிந்தோடி ஒலியலை செய்யும் கடலோடு கலக்கும் நொடி
ஊரெல்லாம் என் உடன் இருப்பினும்
யாரெல்லாமோ என்னுடன் நடப்பினும்
ஆண் என்ற கர்வம் தலையில் இருப்பினும்
என் கரம் நீ பற்றி நடக்கையில்
என் எல்லா கர்வமும் உருகி
நான் இருந்த உலகம் என் பார்வையில் இருந்து விலகி
உன் விழியில் நம் உலகம் பார்த்த தருணம் மீண்டும் கண்டேன்
இன்னும் மீளவில்லை என்பதனை இன்றும் உணர்ந்தேன்!



Wednesday, August 15, 2012

இந்தியன் அல்ல நான்!!!


ந்த அண்டத்தின் அழகுகளில் ஒன்றென இருக்கும் இடம்
அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேல் இன்னமும் குண்டுகள் தெறிக்க வாழுமிடம்
இன்னமும் சுதந்திரம் என்ற ஒன்றை முழுமையாக காணாத இடம்
சொந்த நாடென மிக நேசித்தது சகாக்களின் வாழ்வை சவமாக்கியும்
இன்னமும் அவ்விடத்தை கொண்டு என்ன செய்ய உத்தேசம்
என் தேசம் உரைத்தது இதுவல்லவே
இந்தியன் என்ற ஒரு சொல் தான் – அவர்கள்
கஷ்மீரில் வாழ இன்னமும் தடையாக இருப்பின்
அதை துறந்துவிடுகிறேன்!




Sunday, July 29, 2012

வேண்டுகோள்

கோபத்தையும், மகிழ்ச்சியையும் கண்ணாடிபோல் காட்டிய இம்முகம் வெளிறிப்போய்,
ஓடி ஆடிய கால்கள் ஓய்ந்து
எட்டி எட்டி பிடிக்க முயன்ற கைகள் விறைத்து
என் ஆவி பிரிந்து
இவ்வுடல் மட்டும் ஏதேனும் ஒரு தெருவில் –
கேட்பார் அற்று கிடக்குமாயின்,
அதன் அருகில் பதுங்கு குழிகள் இருக்கக் கூடும்
அதில் போட்டு போவோர் ஒவ்வொருவரும் ஒரு கை மண் தெளித்து போங்கள்
அருகில் கடல் இருப்பின் அதில் வீசிவிட்டு போங்கள்
காடெனில் விட்டு விட்டு போங்கள் இரையாகிப்போவேன்.
என்னோடு வந்தவர்களை வெற்றி வேகமாய் அழைத்திருக்கக்கூடும்
இல்லையேல் கொடுங்கைகள் அவர்களை நின்று நிதானிக்க விடாது விரட்டி இருக்கக்கூடும்.
காரணம் எதுவாயினும் இன்னும் முடிந்து விடவில்லை
ஒவ்வொரு விடியலும் புது ஆரம்பமே!
உணவுக்காக வரும் கூட்டம் நீங்கள் எனில்
என்னை உண்டு விடுங்கள்
சீரணம் ஆகும் போது உங்கள் குடல் வழி வண்டல் என வர மாட்டேன்
ரத்த நாளங்களில் புது ரத்தம் என பாய்ந்து வருவேன்
முன்னேரிச்செல்வோம்!



Saturday, July 21, 2012

எதையும் நம்பிடேன்


வனே இல்லை எனில் என் தமிழ் வளர்ந்தது எவ்வண்ணம்
அவனை பரிகாசம் செய்யின்.,
திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் ஏற்றிய பாடல் கூற்று என்ன?
திருமூலர் சொன்னா திருமந்திரம் பொய்யென கொள்வேனோ?
இவன் பேச்சில் பெரிய புராணம் புதைந்துவிடின் என் தமிழ் என்னவாவது?
இன்னமும் கரம் பிடித்து தடுமாறி நடக்கும் – அறுவியல்
சொல்லும் நாள் வரை அவனை எண்ணாது இருக்குமோ என் மனம்
எல்லாம் அவன் என்றும்
அவன் என்னுள்ளும் என்ற பின்
இன்னும் தெருவில் தேடுவேனோ?
ஆனால் கையில் விதை இருக்க நிழல் கிட்டிடுமோ?
எடுத்து எரிந்து விட்டால் வளர்திடுமோ?
மூலவர் அவர் மந்திரமும்  இதுவன்றோ
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
எம் பசுவும் பால் சொரியும்
வெறி ஐந்தும் அடக்கிட முடியும்
என்னை நான் மேய்ப்பேன்!
என்னை என்னுள் கண்ட பிறகு தெரியும் அவன் யார் என்பது
அதுவரை நம்பிடேன் யவர் கூற்றும்!
சொல்லும் சொல் வண்ணமே கேட்கையில் சிலிர்த்திடும் என் மனமே
நம்பிடாதே நம்பி நின்றிடாதே
கேட்கையில் கிட்டிடும் சிலிர்ப்பை காட்டிலும் பெரியது காண்போம்
மெய்யாய் நாம் உணரும் போது!
அதனால் நம்பிடேன் யவர் கூற்றும்!





--சித்ரன்

Saturday, June 23, 2012

குரு

யாதுமானவன்
யாதும் அவன்
என்னுள் எனதை தேடிக்கொள்ள
கற்றுத்தருபவன் - அவன்
எல்லாம் என்னவென்ற கேள்விக்கும்
எல்லாவற்றிலும் நான் யார் என்ற கேள்விக்கும் 
விடை தேட வழி சொல்பவன்  அவன்
மூன்றில் என்னை முதன்மை படுத்தி
உணர்ந்திட உதவுபவன்  அவன்
கட்டுண்டு கிடப்பவன் அன்றே அவன்
கட்டுண்டு இருப்பின் என் கட்டை அவிழ்ப்பது எவ்வாறோ?
சுதந்திரமானவன்
சூத்திரங்கள் உமிழ்பவன்
கர்மம் அறுத்தவன்
தர்மம் அறிந்தவன்  அவன்
கோடியில் ஒருவன் அல்ல என் குரு
கோடிக்கணக்கானோர் என் குரு.




Saturday, June 16, 2012

என் ஜீவன் நீ!

நெருப்பென நான் இருப்பின்
காற்றென நீ வருவாய்
உன்னை உண்டு நான் ஜீவிப்பேன்
என் ஜீவனில் நீ மீண்டும் பிறப்பாய்
என் ஜீவன் அன்றோ நீ!



Friday, May 4, 2012

உன்னோடு நான்!!!

ன் அலாதி அன்பில் நினைந்து
நானும் ஒரு துளி என்று ஆனேன்
உன் மழையில் இன்னும் எத்துனையோ உறவுகள்
தாய் என்று தந்தை என்று
தமக்கை என்று தமையன் என்று
ஒவ்வொரு துளியும் நம் உறவின் தூரம் அதிகரிக்க காரணம்
நீ ஆதரிக்காத துளி என்று நம் உறவு இன்று
யாரும் கேட்காத சந்தம்
உறவில்லா உறவோடு நான் கொண்ட பந்தம்!
உன்னோடு நகரும் என் நாளுக்கு தெரியாது 
நீ என்னோடு இல்லை என்று!
நீ இல்லாமல் உன்னோடு நான்!!!